பழநி : பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய பண்பாட்டு துறையின் முன்னாள் மாணவர் நாட்டுத்துரை, மாணவர்கள் தங்கதுரை, ரங்கநாயகன், பழனியாண்டவர் கல்லூரியின் முதல்வர் ஜெயபாலன், பேராசிரியர் வைரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.பழநியில் இருந்து வட கிழக்கில் 22 கி.மீ., துõரத்தில் கூத்தம்பூண்டியான் வலசில் உள்ள மாயவன் மலை பாறையின் அடிப்பகுதியில் ஒரு முற்றுப்பெறா குடவறை காணப்பட்டது.
இது திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக கண்டறியப்பட்ட குடவறை என்பது சிறப்பு அம்சமாகும். இக்குடவறையானது தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 10.5 மீட்டர் நீளத்திலும், 4 மீட்டர் உயரத்திலும் குடையப்பட்டுள்ளது. பாறையினை 60 செ.மீ., வரை உள்நோக்கி குடைந்து அதில் 4 தூண்களையும் அமைத்து ஏதோ ஒரு காரணத்தினால் முற்றுப்பெறாமல் உள்ளது. இதன் காலத்தை கணக்கிட கல்வெட்டுகளோ , வேறு ஆதாரங்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் இது பாண்டியர் கால குடவறை மரபினை சேர்ந்ததாக காணப்படுகிறது. முதலில் குடவறை அமைப்பதற்கான "மாதிரி செதுக்கு படிவ முறை' கையாளப்பட்டதற்கான அமைப்பு முறையானது 7.80 மீட்டர் நீளத்திலும், 2.75 மீட்டர் உயரத்திலும் குடவறையின் வலது பக்கத்தில் காணப்படுகிறது.
தினமலர், 19-08-2007
மதியம் 9.10.07
பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டுபிடிப்பு
வலையாக்கம்: ம. எட்வின் பிரகாசு நாளும் நேரமும்: மதியம் செவ்வாய், அக்டோபர் 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment