எலும்பு மஜ்ஜை செல்களை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த நவீன சிகிச்சை : ஆய்வு நடத்த ஜப்பான் மருத்துவ மாணவிகள் வருகை

சென்னை : எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடலின் சில பாகங்களில் இருந்து எடுக்கப்படும் செல் களை பயன்படுத்தி நோய் களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ குறித்து ஆய்வு நடத்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் சென்னை வந்துள்ளனர்.

புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட உடலில் ஏற்படும் நோய்களுக்கு ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ (மறு உற்பத்தி மருத்துவம்) முறையில் சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோய் காரணமாக பாதிக்கப் பட்ட செல்களை அகற்றிவிட்டு, புதிய செல்கள் மூலம் நோயை தீர்ப்பதற்கு இம்முறை பெரிதும் உதவும்.

இதன்படி, நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் எலும்பு மஜ்ஜையில் இருந்து குறிப்பிட்ட செல்லை பிரித் தெடுத்து, அது ஆய்வகத்தில் வளர்க்கப்படும். பின்னர், செல்கள் நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பில் பொருத்தப்படும். அங்கு செல்கள் பெருகி, பாதிப்பை குணப் படுத்தும். இம்முறையின் கீழ் புற்றுநோய், நீரிழிவு, முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.சென்னையில் உள்ள என்.சி.ஆர்.எம்., நிறுவனம், ஜப்பான் நாட்டின் யமனாஷி பல்கலைக்கழத்துடன் இணைந்து ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மருத்துவ முறை குறித்த விஷயத்தில் இணைந்து செயல்படும் வகையில் யமனாஷி பல் கலைக்கழகமும், என்.சி. ஆர்.எம்., நிறுவனமும் கடந்த 2007ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் படி, ‘ரீ ஜெனரேட்டிங் மெடிசின்’ குறித்த தொழில் நுட்ப விஷயங்களை யமனாஷி பல்கலைக் கழகம் வழங்கும். மருத்துவ சிகிச்சையில் என்.சி.ஆர்.எம்., நிறுவனம் கவனம் செலுத்தும்.

இப்புதிய முறை குறித்து என்.சி.ஆர். எம்., நிறுவனத்தின் இயக்குனர் சாமுவேல் ஆப்ரகாம் கூறுகையில், “கடந்த ஆண்டு யமனாஷி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு நிபுணர்கள் சென்னை வந்து, ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசன்’ குறித்து ஆய்வுகள் நடத்தினர். தற்போது, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏழு மாணவிகள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு சென்று, அங்கு தரப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அறிந்து கொள்கின்றனர்” என்றார். பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் கூறுகையில், “புற்றுநோய், நீரிழிவு, முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ தொழில் நுட்பம் பெரிதும் உதவும். இம்முறையில் எக்காரணம் கொண்டும் பிற ‘புரோட்டீன்’கள் பயன் படுத்தப்படுவதில்லை. பிராணிகள் மற்றும் அடுத்தவர்களின் செல்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. நோயாளிகளின் பெற்றோர், உறவினர்களின் செல்கள் கூட பயன் படுத்துவதில்லை. நோயினால் பாதிக்கப் பட்டவரின் செல்களை பயன்படுத்தி மட்டுமே சிகிச்சை அளிக்கப் படுகிறது' என்றார்.


தினமலர், 19-08-2007

1 மறுமொழிகள்:

said...

Is this ஆய்வு conducted on Indian patients... ???

If so this is a serious issue

Have they got ethical clearence