மோப்ப நாய்களின் நிலை படுமோசம்

புதுச்சேரி: வழக்குகளில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்குவதற்கு போலீசாருக்கு மோப்ப நாய்கள் பெரும் உதவி புரிகின்றன. பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதில் மோப்ப நாய்களின் பங்கு பெரிய அளவில் இருந்துள்ளது.

புதுச்சேரி போலீஸ் துறையில் பராமரிக்கப்பட்டு வந்த உஷா என்ற மோப்ப நாய் உள்ளிட்ட மூன்று நாய்கள் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் ஏலம் விடப் பட்டன. உஷாவை ஏலத்தில் எடுத்த நபர், அதை தனது சாராய கடை பாதுகாப்பில் ஈடுபடுத்தினார்.

இங்கு சரிவர உணவு வழங்காததாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் நலம் குன்றிய மோப்ப நாய் உஷா, உணவுக்காக தட்டாஞ்சாவடி, சண்முகாபுரம் மார்க்கெட் பகுதியில் சுற்றி திரிந்த போது, 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து அதை கடித்து குதறின. பரிதாபப்பட்ட ஒருவர், உஷாவை மீட்டு தன் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். மக்களுக்காக உழைத்து, ஓடாகிப் போன மோப்ப நாய்களை ஏலம் விடாமல், அரசே இறுதி வரை பராமரித்தால் இந்த அவல நிலை ஏற்படாது.

செய்திக்கட்டுரை, தினமலர், 18-08-2007

0 மறுமொழிகள்: